Hosted by Dailymotion. For legal issues report at the Copyright Center, report us on DMC, or use the Instant Removal tool.
Saroja-Shrinivas-Mangalya-Bikshay
1 Views • Oct 04, 2014
Description
சதுர்முகுந்தன் தேவியாரே ஸரஸ்வதி தாயே
சந்ததமும் எந்தனுடன் நாவில் வாழம்மா
பரிபூரணி பஞ்சாக்ஷரி பார்வதித்தாயே
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
கொத்துடன் தான் செவ்விளநீர் கொங்கையுள்ளாரே
குலவாழும் கைலாச நாதன் நாயகி
மெத்தடங்கும் மொழியாளே வாவென்றழைத்து
மடிகோரி மாங்கல்ய பிக்ஷையிடம்மா
முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே
முக்கண்ணன் தேவியாரே பார்வதித்தாயே
சிக்கண்ணன் சிவனருளாலே வாழவேண்டும்
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
ஆருஜடைமேலிருக்கும் அலங்காரியே
ஐந்துதலை நாகம் பூண்டாடும் தேவியே
பொன்னுடனே பொற்பாதம் கொடுக்கும் தாயாரே
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மாதாவே தாயாரே பார்வதித்தாயே
மண்ணில் வாழும் மஹாதேவநாதன் நாயகி
தாரம் நீ ஒழிய வேரொருவரில்லையே
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா
ஆதியந்தம் அற்றவளே அன்னமே தாயே
அரனென்கும் கைலாச நாதன் நாயகி
தேன்ரஸம் உள்ள தாயே எந்தனிடத்தில்
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
பொன்னான நாயகியே பார்வதித்தாயே
எண்ணா மலைகள் தோறும் வளர்ந்தாயே
கண்ணாரக்காட்சியுள்ளோர் ஆசை தீர்த்தாயே
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
காவல் கொள்ளும் மணவாளனாய்க் கைபிரியாது
அக்னி முன்பாகவே வலக்கைப் பிடித்த
அன்பான கணவருக்குப் பின் பிரியாமலே
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து
மனஸ்தாபம் தீர்ப்பாயம்மா நீயிரங்கியே
ஏழைக்கிரங்கம்மா எந்தன் மாதாவே
என் மேல் கிருபை பாரு பார்வதித்தாயே
தந்தையோடு தாயாரும் தானுமாகவே
ஸந்தான சம்பத்தையும் தந்தருளம்மா
ஒத்த உடன்பிரப்பையும் தந்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து
மற்ற வேறு சத்துருக்கள் வந்தண்டாமலே
புத்திரர்களையும் பாக்யத்தையும் தந்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வாழ்வுமுண்டாம் சோர்வுமுண்டாம் சிதருமுண்டாம்
மாதாவுந்தனிடத்தில் பக்தியுமுண்டாம்
எந்தனுடைய பெண்குறையைத் தீர்த்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
சுபம்
"முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே" இதன் பொருள் என்னைக் குழப்புகிறது. என் மனைவியோ பிடிவாதமாக தான் சொன்ன வார்த்தைகள் அப்படித்தான் இருக்கின்றன என்று பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு எண்ணம் உதயமாயிற்று.
கேழ்ப்பாரில்லாமல் அழுது கொண்டிருந்த குழந்தை திருஞானசம்பந்தரை
அம்மையார் அன்பும் அருளுடன் எடுத்துக்கொண்டு பாலூட்டினார் என்று சொல்லப் படுகிறதே அதை சிலேடையாகக் குறிக்கின்றதோ?
Keywords & Tags
More from User
VS_80th_Bday.MP4
Venkatram Shrinivas
orarumugamundu
Venkatram Shrinivas
Manasa Sancharare - Nithyasree
Venkatram Shrinivas
Unnai Thuthikka - Melodious Moods Of P.Unnikrishnan - Vol-2
Venkatram Shrinivas
VS_80th_Bday.MP4
Venkatram Shrinivas
Karpanayenralum
Venkatram Shrinivas
Related Videos
Saroja-Shrinivas-Mangalya-Bikshai
Venkatram Shrinivas
Saroja-Shrinivas-Devotional-Songs
Venkatram Shrinivas
Saroja-Shrinivas-Sumangali-Prarthanai
Venkatram Shrinivas
Kanakadara-Stotram-Saroja-Shrinivas
Venkatram Shrinivas
Shrinivas Kalyana
Mahadevsb Mahadev
Happy birthday Guru Mandolin U Shrinivas sir
Keyboard Sathya